Saturday 12 June 2010

மாற்று நாடக இயக்கத்தின் கோடை முகாம் 2010





























மாற்று நாடக இயக்கத்தின் எட்டாவது ஆண்டு கோடை ஆளுமை வளர்ச்சி - நாடகப் பயிற்சி முகாம் மே 30 (ஞாயிறு) தொடங்கி ஜூன் 06 (ஞாயிறு) ஆகிய எட்டு நாட்கள் திருப்பத்தூர் தூய நெ ஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. 98 மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். இவர்களில் 40 பேர் பெண்கள் ஆவர். மாணவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் குழு, பம்மல் சம்பந்தனார் குழு, கண்ணப்பத்தம்பிரான் குழு என அக்குழுக்கள் பெயரிடப் பெற்றிருந்தன. காலை 6.15 மணிக்குத் தொடங்கி இரவு 9.30 வரை பயிற்சிகள் நடந்தன. ஆழி வெங்கடேசன், குமரகுருதாசன், சாமுவேல், கார்த்திகேயன், எழில் குழுவினர், பிரசன்னா ராமசாமி, கருணாபிரசாத், பாலசரவணன், வேலாயுதம், பார்த்திபராஜா ஆகியோர் பயிற்சியளித்தனர்.பாலாவின் இயக்கத்தில், எழுத்தாளர் ஜெயகாந்தனின் 'லவ் பண்ணுங்கோ சார்' சிறுகதையைக் கூத்துப்பட்டறை பாஸ்கர் நிகழ்த்தினார். தலித் பெண்ணிய எழுத்தாளர் பாமாவின் 'சாமியாட்டம்' சிறுகதையை விநோதினி நிகழ்த்தினார். பிரசன்னா ராமசாமி இயக்கத்தில் பெண்ணொளி என்ற நாடகத்தைத் திரைக்கலைஞர் ரோகிணி நிகழ்த்தினார். புரியை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் 'அனுமன் தூது' தெருக்கூத்தை நிகழ்த்தினர்.மாணவர்கள் தாங்கள் பயிற்சி முகாமில் கற்றுக் கொண்டவற்றை மேடையேற்ற இனிதே முகாம் நிறைவுற்றது.