Tuesday 23 March 2010

புரிசை கண்ணப்பத்தம்பிரான் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியின் மாணவர்களின் அரங்கேற்றம்

புரிசை கண்ணப்பத்தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றத்தின் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி மூன்றாவது ஆண்டாகத் தெருக்கூத்துப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாண்டு பயிற்சி பெற்ற மாணவர்களைக் கொண்டு, தெருக்கூத்து வாத்தியார் புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களின் நெறியாளுகையில் 'அனுமன் தூது' என்ற கூத்து நிகழ்த்தப்பட இருக்கிறது. ஏப்ரல் 17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் புரிசை கிராமத்தில் இந்நிகழ்வு அரங்கேற இருப்பதாக மன்றத்தின் செயலாளர் கண்ணப்ப காசி அவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.கூத்து, நாடக ஆர்வலர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.நீங்களும் வாங்க!

Thursday 18 March 2010

சினம் தொண்டு நிறுவனத்தின் மகளிர் தின விழாவில் 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' நாடகம்.

20.03.2010 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்.விழாவில் பங்கேற்போர்: எழுத்தாளர் பிரபஞ்சன், திரைப்படக் கலைஞர் ரோகிணி, எழுத்தாளர் கே.வி.ஷைலஜா, செல்வி ப்ளோரா .திருவண்ணாமலை நகர் மன்றத் தலைவர் இரா.திருமகன் தொடங்கி வைக்க திருப்பத்தூர் தூய ஞ்சக் கல்லூரியின் மாற்று நாடக இயக்கம் வழங்கும் ஜே.பி.பிரீட்ஸ்லியின் 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' நாடகம் நிகழ இருக்கிறது.அனைவரும் வருக!

Tuesday 16 March 2010

மாற்று நாடக இயக்கத்தின் நாடகப் பயிற்சி முகாம் - 2010

ஏழாவது ஆண்டாக மாற்று நாடக இயக்கம் எமது கல்லூரியில் மாணவர்களுக்கான ஆளுமை வளர்ச்சி, நாடகப்பயிற்சி முகாமை இவ்வாண்டும் நடத்த்த் திட்டமிட்டுள்ளது. மே 30 முதல் ஜூன் 6 வரை எட்டுநாட்கள் நடைபெறும் இந்த முகாம் உண்டு உறைவிடப் பயிற்சி முகாம் ஆகும்.தமிழகத்தின் மிக முக்கியமான நாடக ஆளுமைகள் வருகை தந்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க உள்ளனர்.

Thursday 11 March 2010

'இன்றும் வாழும் தெருக்கூத்து' நூல் வெளியீடு.

'இன்றும் வாழும் தெருக்கூத்து' நூல் வெளியீடு.நாள்: 14.03.2010 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: மாலை 6 மணி.இடம்: கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளி, திருவண்ணாமலை.
வெளியிடுபவர்: திரைப்படக் கலைஞர் நாசர்பெறுபவர்: கவிஞர் இளையபாரதிநூல் குறித்து: முனைவர் கி.பார்த்திபராஜா
அனைவரும் வருக!
1980 களில் தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைஞர்களோடு இயக்கம் கண்டு செயல்பட்டவர் பி.ஜே.அமலதாஸ். அவருடைய முயற்சியால் அப்போது 'என்றும் வாழும் தெருக்கூத்து' என்ற நூல் வெளியிடப்பட்டது. இப்போது பல புதிய கட்டுரைகள், படைப்புகளுடன் 'இன்றும் வாழும் தெருக்கூத்து' வெளியிடப்பட்டுள்ளது. நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:1.தெருக்கூத்து ஒரு அறிமுகம்2. தெருக்கூத்தும் சில சிந்தனைகளும் - கவிஞர் சக்தி3. புதிய களரி - அ.அறிவுநம்பி4. தெருக்கூத்தின் வாழ்வும் தாழ்வும் - டாக்டர் முத்துசண்முகன்5. மூலிகைகளும் தெருக்கூத்தும் - ந.முத்துசாமி6. ஏழுமலை ஜமா - பவா.செல்லதுரை7. நேர்காணல் - லட்சுமணன் வாத்தியார்8. கூத்து 'தெரு'க்கூத்தான 'திரு'க்கூத்து - மு.ராமசாமி9. கர்ணமோட்சம் தெருக்கூத்தில் ஒரு பதிவு10. நேர்காணல் - பி.ஜே.அமலதாஸ்11. தெருக்கூத்தின் வாழ்வு நெருக்கடி - ஒரு சக பயணியின் குறிப்புகள்: கி.பார்த்திபராஜா
வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை - 606 601. அலைபேசி: 9444867023, 9443222997.