Friday 26 February 2010

தமிழ் நாடகர்களுக்கு,

வணக்கம். தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டிற்கு வெளியிலுமாக நடைபெறும் நாடக முயற்சிகள் அனைத்தையும் பதிவு செய்ய விரும்புகிறோம். நாடக நிகழ்வைக் காண முடியாவிட்டாலும் நாடகம் குறித்த செய்திகள், புகைப்படங்கள் முதலானவற்றையாவது இந்த இணைய தளம் பார்ப்பவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.எனவே, தமிழ் நாடகர்கள் தங்களின் நாடகச் செயல்பாடுகள் குறித்து எமக்குச் செய்தி அனுப்பித் தருமாறு வேண்டுகிறோம்.

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் நாடக நிகழ்வு.

பிப்ரவரி 27 சனிக்கிழமை, 2010 அன்று மாலை 6 மணிக்குத் திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் மாற்று நாடக இயக்கத்தின் 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்ற நாடகம் நிகழ்த்தப்பட இருக்கிறது. நாடக நிகழ்வைக் காண உங்களை அன்புடன் அழைக்கிறோம்.வருக! வருக!!

Monday 22 February 2010

ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்? (நாடகம்)







மாற்று நாடக இயக்கத்தின் புதிய நாடகத் தயாரிப்பான ஜே.பி.பிரீட்ஸ்லி எழுதி, எழுத்தாளர் ஞாநி அவர்களால் தமிழ் வடிவம் பெற்ற 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்ற நாடகம் பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நான்கு நாட்கள், மொத்தம் ஐந்து காட்சிகள் அரங்கேறின.ஏராளமான மாணவர்களும் திருப்பத்தூர் நகரப் பொதுமக்களும் இந்நாடகத்தைக் கண்டு களித்தனர்.

Monday 8 February 2010

புதிய நாடகத் தயாரிப்பு

எமது மாற்று நாடக இயக்கத்தின் 2010 ஆம் ஆண்டின் புதிய நாடகத் தயாரிப்பு, ஜே.பி.பிரீட்ஸ்லியின் 'தி இன்ஸ்பெக்டர் கால்ஸ்', எழுத்தாளர் ஞாநியால் 'ஒரு விசாரணை' என்று தமிழில் தழுவப்பட்டு, 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்று அரங்கேறுகிறது.பிப்ரவரி 15,16,17 ஆகிய மூன்று நாட்களும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் கரேஞோ அரங்கத்தில் மாலை 6.30 மணிக்கு நிகழ இருக்கிறது. அருகாமையில் இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் இந்த நாடகம் நிகழ்த்தப் பட இருக்கிறது.