Sunday 10 January 2010

புரிசை தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியில் வகுப்புகள் தொடக்கம்:2010




புரிசை கண்ணப்பத் தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றம் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தெருக்கூத்துப் பயிற்சிப்பள்ளியை நடத்தி வருகிறது. கணிசமான ஆண்களும் பெண்களுமாக மாணவர்கள் அப்பள்ளியில் கூத்தினைக் கற்று மேடையாக்கத்தையும் நிறைவு செய்துள்ளனர். இந்த 2010 புத்தாண்டில் பள்ளி, தனது புதிய கூத்துப்பயிற்சியினைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. சனவரி மாதம் 30 ஆம் தேதி தொடங்கும் இப்பயிற்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாட்களும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 15 வாரகால பயிற்சிகளுக்குப் பிறகு, மேடையாக்கமும் காண்கிறது. இளைய தலைமுறையினரிடத்தே, நமது பெருமை மிக்க கலையாகிய தெருக்கூத்தை எடுத்துச் செல்லும் இந்த மிக முக்கியமான பணியில் நாமும் உதவலாம். ஆர்வமுடைய கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களுக்கு நீங்கள் இப்பயிற்சியைப் பரிந்துரை செய்யலாம். கட்டணம் மிகக் குறைவே.புரிசை கிராமம் செய்யாறுக்கும் வந்தவாசிக்கும் இடையே உள்ளது. ஆர்வமும் அக்கறையும் உடையவர்கள் உடனடியாக கூத்துப் பள்ளியின் தலைவர் திரு காசித் தம்பிரான் அர்களைத் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: (+91) 044 24742743.
வாருங்கள்! கலை வலு மிக்க தெருக்கூத்தை, நம் பாரம்பரியத் தமிழ் அரங்கை, புதிய உத்வேகத்தோடும் புதிய உள்ளடக்கங்களோடும் ஏந்திச் செல்லக் கிடைக்கும் நல்ல வாய்ப்பைப் பயன்படுத்துவோம்..
கி.பார்த்திபராஜா