Friday, 26 February 2010
தமிழ் நாடகர்களுக்கு,
வணக்கம். தமிழ்நாட்டிலும் தமிழ்நாட்டிற்கு வெளியிலுமாக நடைபெறும் நாடக முயற்சிகள் அனைத்தையும் பதிவு செய்ய விரும்புகிறோம். நாடக நிகழ்வைக் காண முடியாவிட்டாலும் நாடகம் குறித்த செய்திகள், புகைப்படங்கள் முதலானவற்றையாவது இந்த இணைய தளம் பார்ப்பவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.எனவே, தமிழ் நாடகர்கள் தங்களின் நாடகச் செயல்பாடுகள் குறித்து எமக்குச் செய்தி அனுப்பித் தருமாறு வேண்டுகிறோம்.
திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் நாடக நிகழ்வு.
பிப்ரவரி 27 சனிக்கிழமை, 2010 அன்று மாலை 6 மணிக்குத் திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் மாற்று நாடக இயக்கத்தின் 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்ற நாடகம் நிகழ்த்தப்பட இருக்கிறது. நாடக நிகழ்வைக் காண உங்களை அன்புடன் அழைக்கிறோம்.வருக! வருக!!
Monday, 22 February 2010
ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்? (நாடகம்)
மாற்று நாடக இயக்கத்தின் புதிய நாடகத் தயாரிப்பான ஜே.பி.பிரீட்ஸ்லி எழுதி, எழுத்தாளர் ஞாநி அவர்களால் தமிழ் வடிவம் பெற்ற 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்ற நாடகம் பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நான்கு நாட்கள், மொத்தம் ஐந்து காட்சிகள் அரங்கேறின.ஏராளமான மாணவர்களும் திருப்பத்தூர் நகரப் பொதுமக்களும் இந்நாடகத்தைக் கண்டு களித்தனர்.
Monday, 8 February 2010
புதிய நாடகத் தயாரிப்பு

Subscribe to:
Posts (Atom)