Sunday 9 October 2011

அறப்போர் – கையெழுத்து இயக்கம்.

இனியும் ஒரு உயிர் பறிபோவது உமக்குச் சம்மதமா?
மூன்று தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி
மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி
அறப்போர் – கையெழுத்து இயக்கம்.
---------------------------------------------------------------------------------------------------
நாள்: 14.09.2011 புதன்கிழமை நண்பகல் 12 மணி
இடம்: தூய நெஞ்சக் கல்லூரி அருகில், திருப்பத்தூர், வே.மா.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித நேயம் கொண்டோரே…
இராஜீவ்காந்தி கொலை வழக்கில் அற்பமான குற்றச்சாட்டில் 21 ஆண்டுகளாகச் சாவை எதிர்நோக்கியிருக்கிறார்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன்!
‘மனசாட்சியின் கண்ணீர் குரலாகச் சொல்லுகிறேன்… எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை!’ என்று கதறும் பேரறிவாளனின் கண்ணீர்க்குரல் உங்கள் மனதைப் பிசையவில்லையா?
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், உயிருக்கு உயிர் என்று அப்பாவிகள் பலியிடப்படுவதில் உங்களுக்குச் சம்மதமா?
குற்றவாளிகள் எல்லோரும் தண்டனை பெறுவதில்லை; தண்டனை பெற்றோர் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை! பேரறிவாளன், சாந்தன், முருகன் – மூவரும் 21 ஆண்டுகள் கொடிய சிறையில் வேதனை அனுபவித்த பிறகும் கொலை புரியத் துடிக்கும் அரசாங்கத்திற்கு உங்களின் மவுனம் ‘சம்மதம்’ அல்லவா?
“மத்திய மாநில அரசுகளே! மூன்று தமிழ்களையும் விடுதலை செய்!” - -எனக் கேட்டு நீங்கள் போடும் ஒரு கையொப்பம் மூவரின் உயிரையும் காப்பதற்கு உதவும். மனித நேய வரலாறு படைக்க உங்கள் கையெழுத்து உதவட்டும்!
மாணவ மாணவிகளே! பொதுமக்களே! மனித நேயம் கொண்டோரே…
வாருங்கள்! மரண தண்டனைக்கு எதிராகக் கையொப்பமிட!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித நேயப் பற்றாளர்கள் கூட்டமைப்பு, திருப்பத்தூர், வே.மா.
தொடர்புக்கு: 9094107737, 9443221399, 9345011588, 9366655399

No comments: