Tuesday 23 March 2010

புரிசை கண்ணப்பத்தம்பிரான் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளியின் மாணவர்களின் அரங்கேற்றம்

புரிசை கண்ணப்பத்தம்பிரான் பரம்பரைத் தெருக்கூத்து மன்றத்தின் தெருக்கூத்துப் பயிற்சிப் பள்ளி மூன்றாவது ஆண்டாகத் தெருக்கூத்துப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவ்வாண்டு பயிற்சி பெற்ற மாணவர்களைக் கொண்டு, தெருக்கூத்து வாத்தியார் புரிசை கண்ணப்ப சம்பந்தன் அவர்களின் நெறியாளுகையில் 'அனுமன் தூது' என்ற கூத்து நிகழ்த்தப்பட இருக்கிறது. ஏப்ரல் 17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம் புரிசை கிராமத்தில் இந்நிகழ்வு அரங்கேற இருப்பதாக மன்றத்தின் செயலாளர் கண்ணப்ப காசி அவர்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.கூத்து, நாடக ஆர்வலர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.நீங்களும் வாங்க!

No comments: